Publicidade

Salmos 11

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1 நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்;

பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி,

பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

2 இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து,

செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

3 அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே,

நீதிமான் என்ன செய்வான்?

4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;

யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;

அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.

5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்;

துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்;

நெருப்பும், கந்தகமும்,

அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்;

அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-