Publicidade

Salmos 123

ஆரோகண பாடல்.

1 பரலோகத்தில் இருக்கிறவரே,

உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.

2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,

வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,

எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,

எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,

எங்களுக்கு இரங்கும்;

அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும்,

அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,

எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-