Publicidade

Salmos 14

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;

நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.

3 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

4 அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?

அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;

அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.

5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;

தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.

6 ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,

நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.

7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபுக்குச் சந்தோஷமும்,

இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-