Publicidade

Salmos 111

1 அல்லேலூயா,

செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,

அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.

3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,

அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,

யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.

5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;

தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,

தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;

அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,

அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.

9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,

தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;

அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு;

அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-