Publicidade

Salmos 128

ஆரோகண பாடல்.

1 யெகோவாவுக்குப் பயந்து,

அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

2 உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்;

உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

3 உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்

திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;

உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

4 இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்

இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.

5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;

நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

6 நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும்,

இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-