Publicidade

Salmos 76

அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;

இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.

2 சாலேமில் அவருடைய கூடாரமும்,

சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.

3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,

கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)

4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.

5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,

உறங்கி அசந்தார்கள்;

வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.

6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்

இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

7 நீர், நீரே, பயங்கரமானவர்;

உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,

தேவனே நீர் எழுந்தருளினபோது,

9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;

பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)

10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;

மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;

அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.

12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;

பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-