Publicidade

Salmos 126

ஆரோகண பாடல்.

1 சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,

கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,

நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;

அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்

என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;

இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

4 யெகோவாவே,

தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,

எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.

5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள்

கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.

6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;

ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு

கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-