Publicidade

Salmos 149

1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.

2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,

மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.

3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,

தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.

4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;

சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,

தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,

7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,

அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும்,

எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,

8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,

அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.

9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.

அல்லேலூயா.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-