Publicidade

Salmos 138

தாவீதின் பாடல்.

1 உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;

தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,

உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;

உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;

என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;

4 யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்

உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.

5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,

அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.

6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,

தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;

மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;

என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;

உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

8 யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;

யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;

உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-