Publicidade

Salmos 121

ஆரோகண பாடல்.

1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக

என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.

2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின

யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.

3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்;

உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.

4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5 யெகோவா உன்னைக் காக்கிறவர்;

யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.

6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ

உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;

அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.

8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும்

இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-