Publicidade

Salmos 67

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.

1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,

எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,

2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,

உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)

3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;

ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,

கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)

5 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;

எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

6 பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;

பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_06-35-37-