Publicidade

Salmos 43

1 தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து,

பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும்,

அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.

2 என் பெலனாகிய தேவன் நீர்;

ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?

3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்;

அவைகள் என்னை நடத்தி,

உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.

4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும்,

எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே,

என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.

5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு;

என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-