Publicidade

Salmos 129

ஆரோகண பாடல்.

1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு

அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.

2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,

என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,

தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

4 யெகோவாவோ நீதியுள்ளவர்;

துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,

இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.

6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;

அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.

7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,

அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.

8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;

யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்

என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-