1 என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்;
என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்;
ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்;
எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,
யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும்,
அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.