13 கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?
"அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை" என்று
அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?
14 ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;
நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து,
அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர்.
பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்;
திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.