1 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி.
2 என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே.
3 அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்;
உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார்.
4 அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார்,
உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார்103:4 முடிசூட்டுகிறார் அல்லது ஆசீர்வதிக்கிறார்..