7 உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்?
உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்?
8 நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
9 அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும்,
கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும்,
10 அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்;
உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.