1 என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,
அவர் என் கைகளை யுத்தத்திற்கும்,
என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.
2 அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை,
என் அரண், என் மீட்பர்,
அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம்,
நாடுகளை144:2 நாடுகளை என பல கையெழுத்துப் பிரதிகளிலும், என் மக்கள் என எபிரெய மொழி பிரதிகளிலும் உள்ளது. அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.