1 யெகோவாவைத் துதியுங்கள்149:1 துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது..
யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள்,
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.
3 அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும்,
தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.
4 ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்;
தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
5 பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து
தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.