3 நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும்,
இரவில் என்னைச் சோதித்தாலும்,
நீர் எந்தத் தீங்கையும் கண்டுபிடிக்கமாட்டீர்;
என் வாயினால் நான் பாவம் செய்யமாட்டேனென்று தீர்மானித்திருக்கிறேன்.
4 மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும்,
உமது உதடுகளின் கட்டளையினால் வன்முறையாளர்களின் வழிகளிலிருந்து,
என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
5 உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன;
என்னுடைய பாதங்கள் தடுமாறவில்லை.