6 இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுக்கிறவர்.
எனக்குச் செவிகொடுத்து என் மன்றாட்டைக் கேளும்.
7 உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை,
அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தினால் காப்பாற்றுகிறவரே,
உமது உடன்படிக்கையின் அன்பின் அதிசயத்தைக் காண்பியும்.
8 உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்;
உமது சிறகுகளின் நிழலின்கீழ்,
9 என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும்
என்னைச் சூழ்ந்துகொள்ளும் என் பகைவரிடமிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.