1 யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன்.
2 யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,
என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார்.
3 துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.