1 நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக;
யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக.
2 யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி,
சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக.
3 யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து,
உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக.
4 யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து,
உனது திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வாராக.