6 நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்:
யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார்.
அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து
தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார்.
7 சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;
ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம்.
8 அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள்,
நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம்.