7 ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்;
உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம்
அவர் அசைக்கப்படமாட்டார்.
8 உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்;
உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
9 நீர் வரும் நேரத்தில்
அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர்.
யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்;
அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.