16 நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது;
என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள்.
17 என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்;
மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.
18 அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு,
என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.