1 யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது.
2 அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார்,
அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.
3 அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்.
தமது பெயருக்காக அவர் என்னை,
நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.