3 யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்?
அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
4 சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும்
தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும்
பொய் சத்தியம் செய்யாதவனுமே.
5 அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்,
தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.