1 யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,
ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;
என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.
2 என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
நீர் என்னை சுகமாக்கினீர்.
3 யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;
குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.