17 விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்;
அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.
18 யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல்
அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
19 மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார்,
பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.