11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;
அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்;
உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி,
அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.
12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;
ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.