12 என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல;
அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்;
எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால்,
நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன்.
13 ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும்,
எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே.
14 நாங்கள் ஒன்றுகூடி
இனிய ஆலோசனைபண்ணி,
மக்கள் கூட்டத்துடன்
இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.