5 ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.
6 அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்
என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.
7 என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;
இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார்.
8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்;
இறைவனே நமது புகலிடம்.