1 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
2 அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
3 இறைவனிடம் சொல்லுங்கள், "உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!
உமது வல்லமை பெரிதானது;
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
4 பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்."