1 என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்;
என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
2 நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்;
நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
3 நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும்
எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.
4 நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்;
யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும்,
அவருடைய வல்லமையையும்,
அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.