23 ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்;
வானங்களின் கதவுகளைத் திறந்தார்.
24 அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்;
பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25 இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்;
அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை
இறைவன் அவர்களுக்கு அனுப்பினார்.