3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்
அவற்றில் நீர் பதித்து வைத்த
சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி
நான் சிந்திக்கும்போது,
4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?8:4 எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?
5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,
அவர்களை8:5 அவர்களை அல்லது அவனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.