1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
2 யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள்,
நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள்.
3 நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும்,
மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.