1 யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
2 தீய மனிதர் என்னை விழுங்கும்படி
எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,
எனது பகைவரும் விரோதிகளுமான
அவர்களே தடுமாறி விழுவார்கள்.
3 ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,
என் இருதயம் பயப்படாது;
எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,
அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.