4 நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்;
யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும்,
அவருடைய வல்லமையையும்,
அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
5 அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு,
இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி,
அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி,
நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6 அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்;
இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள்,
அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
7 அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து,
அவருடைய செயல்களை மறவாமல்,
அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள்.