1 வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்;
நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.
2 நன்றியுடன் அவர்முன் வருவோம்;
இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
3 யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்;
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன;
மலை உச்சிகளும் அவருக்கே உரியவை.
5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
6 வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்;
நாம் முழங்காலிடுவோம்.